தமிழகத்தில் 2வது நாளாக இன்றும் சு.சுவாமி கொடும்பாவி எரிப்பு!
சென்னை: உளுந்தூர்பேட்டை: தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க இலங்கை அரசுக்கு தானே ஆலோசனை கூறினேன் என்று பேட்டி கொடுத்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் 2வது நாளாக இன்றும் கொடும்பாவி எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைக்கு நான் சென்ற போது மகிந்த ராஜபக்சேவை சந்தித்து தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு தற்போது செய்து வருகிறது என்று கூறியிருந்தார்.

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு எதிராக தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் சென்னை கோயம்பேடு, விழுப்புரம் அருகே உளுந்துர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயளாலர் வ.ச.சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் ஞா.ராஜேஷ், ஒன்றிய செயலாளர் க.கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications