சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற சு.சுவாமி சொல்லும் 'அடடே' காரணம்

சசிகலாவை பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. இதனால்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

swamy

தற்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அண்மைக் காலமாக சசிகலாவை ஆதரித்து சுப்பிரமணியன் சுவாமி பேசி வருகிறார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. மத்திய அரசில் விசாரித்த போது திமுக அரசுதான் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கியது என கூறினர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தற்போது சட்ட ரீதியாக தண்டனை கிடைத்துவிட்டது. இனி அவர் பெங்களூரு சிறையில் இருக்க வேண்டியதில்லை.

இதற்காக ஆண்டுதோறும் கர்நாடாக அரசுக்கு நாம் பணம் ஏன் கொடுக்க வேண்டும். அதற்காகவே சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றிவிடலாம்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+