வாட்டிய பனி… கொட்டி விட்டு போன மழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி
சென்னை: சென்னையில் இன்று காலை நேரத்தில் பெய்த திடீர் மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. கடந்த சில நாட்களாக அதிகாலையில் மூடுபனியும், பகல் நேரங்களில் கடும் வெயிலும் இரவில் குளிருமாக வாட்டி வதைத்த நிலையில் இன்று திடீரென பெய்த மழை சென்னை வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆனால் மழைக்கான அறிகுறி எதுவும் இல்லாமல் சென்னையில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. வியாழக்கிழமையன்று லேசாக தூரல் போட்டது. வெள்ளிக்கிழமையன்று மழைக்கான அறிகுறியே இல்லை. இந்த நிலையில் சனிக்கிழமையன்று காலையில் வழக்கம்போல காணப்படும் மூடுபனி தென்படவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
காலை 8.30 மணியளவில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது. மழை காரணமாக மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் பகுதியில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடலூர் மாவட்டத்தில், சில இடங்களில் நேற்று காலை முதல் மழை பெய்தது. பல ஆயிரம் ஏக்கரில், அறுவடைக்கு நெற்கதிர்கள் தயாராகவுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மழை தொடர்ந்தால், கடந்த 3 மாதங்களாக உழைத்ததற்கு பலன் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழையும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
தை மாதம் அறுவடை மாதம் என்பதால் மழை பெய்ய வாய்ப்பே இல்லை என்பார்கள். பனிக்காலத்தில் பெய்த மழையால் பயிர்கள் அறுவடை செய்வது பாதிக்கும் என்கின்றனர் கடலூர்வாசிகள்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications