Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் பள்ளம்.. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்ததா? திருப்பத்தூரில் பரபரப்பு! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அறிவியல் மைய அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் ராஜி என்பவரின் நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த திருமலை என்பவர் தான் முதலில் பார்த்துள்ளார்.

Sudden sinkhole has occurred near Tirupathur was created panic among the people


ஆனால், அது ஏதோ சாதாரண பள்ளம் என நினைத்து கடந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் அதே இடத்திற்கு சென்ற திருமலை அங்கு இருந்த பள்ளத்தை பார்க்கும்போது அதில் இருந்து அதிக வெப்ப அனல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அச்சமடைந்த மக்கள் பள்ளத்தின் முன்பு குவிந்து பார்வையிட்டனர். அந்த மர்ம பள்ளம் ஏற்பட்டது எப்படி எனத் தெரியாமல் குழம்பினர்.

வானில் இருந்து மர்ம பொருள் விழுந்திருக்கலாம் என மக்கள் பீதி அடைந்தனர். வானில் இருந்து ஏலியன்கள் விழுந்திருக்கலாம் என அப்பகுதியில் வதந்திகள் தீயாகப் பரவின. இந்த மர்ம பள்ளம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலறிந்து நேரில் சென்று பார்வையிட்டார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ். மேலும், பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக வைக்க கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

அதோடு, தமிழ்நாடு அறிவியல் நொழில்நுட்ப மையத்தின் இயக்குநரிடமும் இதுபற்றி தெரிவித்தார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ். இதையடுத்து, சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செயல் இயக்குநர் உத்தரவின்படி, வேலூர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையத்தின் மாவட்ட அறிவியல் அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

மேலும், அந்த 5 அடி பள்ளத்திலிருந்து மண் மற்றும் சாம்பல் மாதிரிகளை சேகரித்தார். பள்ளத்தின் அருகே உள்ள மண் மாதிரிகளையும் சேகரித்தார். இந்த மண் மற்றும் சாம்பல் மாதிரிகளை சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார்.

மேலும், அங்கு விழுந்த மர்ம பொருள் எரிகல்தான். விழுந்த வேகத்தில் மண் சாம்பலாக மாறி உள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே சுற்றி வரும் சிறு கோள்கள் பூமி நோக்கி வரும்போது எரிகல்லாக மாறிவிடும், அதுதான் இங்கு விழுந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+