Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலவரம் நடத்த திட்டம்..இபிஎஸ் உள்பட அதிமுகவினர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 30 பேர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர்

அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அண்மையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடத்தினர். இதையடுத்து கொங்கு மண்டலத்திலும் இதேபோன்ற ஒரு மாநாடு நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 Supporters of O Panner Selvam filed a complaint against AIADMK GS EPS

இந்த நிலையில், சேலம் மேற்கு மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் மாலை எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ, ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அதிமுக கொடிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி நகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அந்த மண்டபத்துக்குள் புகுந்தனர். நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர். இதனால் அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

அப்போது லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதனால் ஆவேசம் ஆன அதிமுகவினர் மண்டபத்தின் முன்பு எடப்பாடி-சேலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வங்கு வந்த போலீசார், அதிமுக நிர்வாகிகளை குண்டு கட்டாக கைது செய்தனர். இதனிடையே, கூட்டம் முடிவடைந்த பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியே வந்தனர்.

அப்போது அங்கு எடப்பாடி நகர செயலாளர் முருகன் தலைமையில் அதிமுகவினர் அங்கு திரண்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த புகழேந்தியை பார்த்ததும் அவரது காரை வேகமாக தட்டினர். மேலும் தகாத வார்த்தைகளையும் பேசினர். எனினும், சுதாரித்துக் கொண்ட புகழேந்தியின் கார் டிரைவர், ஓட்டி சென்றார்.

இதனால் புகழேந்தி நல்விதமாக எந்தவித காயங்களும் ஏற்படாமல் தப்பினார். இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 30 பேர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

 Supporters of O Panner Selvam filed a complaint against AIADMK GS EPS

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+