தூத்துக்குடி அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் ஆளில்லா விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அதன் குடியிருப்பு பகுதிகள் ஆளில்லா விமானம் மூலம் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் நேற்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மறுபரிசோதனை செய்யப்பட்ட 7 பேரில் எஞ்சியுள்ள 2 உடல்களை ஒப்படைக்க உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இன்று மாலைக்குள் அவர்களது உடல்களும் ஒப்படைக்கப்படும் என்றார்.
இதனிடையே உடலை வாங்க கூட்டமாக அனைவரும் திரண்டு வராமல் உறவினர்கள் மட்டுமே வந்து உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உறவினர்கள் அல்லாமல் வேறு யாரேனும் மருத்துவமனை வளாகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக யாரேனும் நிற்கிறார்களா? அல்லது உறவினர்கள் அல்லாதவர்கள் மருத்துவமனைக்குள் நுழைய உள்ளனரா என்பதை அறிய ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விமானங்களில் கேமிராக்களை பொருத்தி அதை வீடியோவாக எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications