எஸ்விஎஸ் இயற்கை மருத்துவ கல்லூரிக்கு அனுமதியே இல்லை... எம்.ஜி.ஆர் பல்கலை துணைவேந்தர்
விழுப்புரம்: விழுப்புரத்தில் 3 மருத்துவ மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி அரசு அனுமதியின்றியே இயங்கி வந்ததாக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.எஸ் கல்லூரியின் மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய 3 பேரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரியின் தாளாளர் வாசுகி சரணடைந்துள்ளார். அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.
இது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications