இவர் பேச்சைக் கேட்டுத்தான் இலங்கை மன்னிப்பு கேட்டுச்சாமே!
மதுரை: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக கட்டுரை வெளியிட்டது தொடர்பாக தான் இலங்கை அரசிடம் பேசியதாகவும், இதன் பிறகே இலங்கை அரசு மன்னிப்புகேட்டதாகவும் சுப்பிரமணியம் சாமி பேசியுள்ளார்.
மதுரையில், பாஜகவின் விவசாயிகள் பிரிவு சார்பில், தேசிய நதிநீர் வழிச்சாலை பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் சாமி கலந்து கொண்டார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார் சாமி.
நான் பேசினேன்
அப்போது அவர் கூறுகையில், இலங்கை ராணுவ இணைய தளத்தில் தமிழக முதல்வரை பற்றி வெளியிடப்பட்ட அவதூறான கட்டுரை குறித்து நான் இலங்கை அரசிடம் பேசினேன்.
என் பேச்சைக் கேட்டு மன்னிப்பு கேட்டது
எனது பேச்சை கேட்ட பின்னர் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது.
இலங்கை அரசு வெளியிடலையாம்
இந்த தகவலை இலங்கை அரசு வெளியிடவில்லை. ஒரு பத்திரிக்கை தான் வெளியிட்டுள்ளது.
சுமூக உறவுக்காக இலங்கை போகிறேன்
இந்தியாவில் பாகிஸ்தான், சீனா ஊடுருவலை தடுக்க, மத்திய அரசு இலங்கை அரசிடம் சுமூக உறவு வைத்து வருகிறது. இலங்கையில் நடைபெறும் ராணுவ மாநாட்டில் நான் கலந்து கொள்ள செல்கிறேன்.
தனியாகக வரச் சொல்லியுள்ளனர்
அப்போது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க இருப்பதாக நான் கூறினேன். அந்த மாநாட்டில் சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொள்ள வருவதால், தனியாக இலங்கை வருமாறு கூறியுள்ளனர். எனவே தமிழர்களை பார்க்க மீண்டும் இலங்கை செல்வேன் என்றார் சாமி.