'அம்மா'வின் அறிவிப்பால் கரும்பு வியாபாரிகளுக்கு தித்திக்கும் பொங்கல், விவசாயிகளுக்கு கசப்பு பொங்கல்
சென்னை: அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் 2 அடி நீள கரும்பு இலவசமாக அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததால் விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகை கசந்து போயுள்ளது.
பொங்கல் பண்டிகை என்றால் கரும்பு இல்லாமலா? விருதுநகர் மாவட்டம் சிவகாசி, எரிச்சநத்தம் அருகே உள்ள நடையனேரி, செவலூர், முருகனேரி, செங்குளத்தில் பொங்கலையொட்டி 100 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிருட்டுள்ளனர். தற்போது கரும்பு அறுவடை பணிகள் நடந்து வருகிறது.
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் வியாபாரிகள் கரும்புகளை பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை விலை பேசுவார்கள். மேலும் விலை பேசி முடித்து முன்பணம் அளித்துவிட்டு செல்வார்கள்.

பணப்புழக்கம்
இந்த ஆண்டு பணப் புழக்கம் குறைவாக இருப்பதால் குறைந்த அளவு வியாபாரிகளே கரும்புகளை பார்வையிட வந்தனர். அவர்களும் ஏக்கருக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வரை தான் பேரம் பேசி முன்பணம் அளித்தனர்.

இலவச கரும்பு
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையைொட்டி 2 அடி நீள கரும்பு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார்.

அதிகாரிகள்
ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் சென்றனர். ஆனால் விவசாயிகள் வியாபாரிகளிடம் முன்பணம் பெற்றதால் கரும்பை அரசு அதிகாரிகளுக்கு விற்க முடியாத நிலையில் உள்ளனர்.

வியாபாரிகள்
விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கரும்பை வாங்கிய வியாபாரிகளோ ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை அரசு அதிகாரிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.

கசப்பு பொங்கல்
நாம் பார்த்து பார்த்து வளர்த்த கரும்புகளை நம்மிடம் குறைந்த விலைக்கு வாங்கி இந்த வியாபாரிகள் எளிதில் அதிக லாபம் பார்த்துவிட்டனரே என்று நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications