அதிமுக அமைதி காத்தால் ஜெயலலிதாவுக்கு மேலும் ஆதரவு பெருகும்.. புதுவை கண்ணன்
புதுச்சேரி: பெங்களூர் தனி நீதிமன்றத் தீர்ப்பால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே பெரிய அளவில் அனுதாபமும், ஆதரவும் கிடைத்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் இது அதிகமாகவே உள்ளது. எனவே அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காத்தால் அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும். இல்லாவிட்டால் எதிரிகளுக்கே லாபமாக போய் முடியும் என்று புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணன் கூறியுள்ளார்.
கண்ணன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது நினைவிருக்கலாம். புதுவை மாநில ராஜ்யசபா உறுப்பினராகவும் அவர் இருக்கிறார். இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கண்ணன் கூறுகையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்காலிகமாக ஒரு சிறிய சறுக்கலாக இருக்கலாம். ஆனால் இந்தத் தீர்ப்பினால் பொதுமக்களிடையே அனுதாபமும், ஆதரவும் அதிகரித்திருக்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அ.தி.மு.க தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன். ஏனென்றால் அ.தி.மு.க. தொண்டர்களின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிரிகளுக்குத்தான் லாபமாக அமையும். அதனால் பொறுமை காக்க வேண்டும். பொதுமக்களிடையே ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆதரவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு இதோடு முடிந்துவிட்டது என்று நினைத்தவர்கள் விரைவில் பெரிய ஏமாற்றத்தை அடைவார்கள். அவருக்கு எப்போதும் என்னுடைய தார்மீக ஆதரவு உண்டு. தேவைப்பட்டால் அவரை எங்கு வேண்டுமானாலும் சென்று சந்திப்பேன் என்றார் அவர்.
-
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications