நாகை: குறுவை சாகுபடிக்கு 3வது ஆண்டாக 'நினைவஞ்சலி' செலுத்திய விவசாயிகள்!
நாகப்பட்டினம்: மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் இந்த ஆண்டும் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி கைவிடப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கக் கூட்டத்தில் குறுவை சாகுபடிக்கு வியாழக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர்
நாகையில் நடைபெற்ற காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் குறுவை சாகுபடி 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி என எழுதப்பட்டிருந்த பதாகையின் முன்பாக விவசாயிகள் மெழுகுவத்தி ஏற்றி வைத்து, நினைவஞ்சலி பதாகைக்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மு. சேரன், பொதுச் செயலாளர் வி. தனபாலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி 5 ஆண்டுகளாகியும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது தமிழக விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு உடனடியாக காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து நதி நீர் பிரச்னைகளுக்கும் விரைவான தீர்வு காண வேண்டும்.

குறுவை சாகுபடி பாதிப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கைவிடப்பட்டிருப்பதால் சுமார் 10 லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர், வேளாண் பிரச்னைகள் குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்.

13 விவசாயிகள் தற்கொலை
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. வேளாண் பிரச்னைகளால், கடந்த ஆண்டு மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் வேளாண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாகையில் பேரணி
விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17-ம்தேதி நாகை புத்தூரிலிருந்து, நாகை பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications