பராமரிப்பு பணிகள்: சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று குறைப்பு
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை கடற்கரை-தாம்பரம், தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
''தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 10.44., 11.20., 11.37., மதியம் 12.20., 12.56., 2.32 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இன்று காலை 11.43., 11.56., மதியம் 12.08., 12.47., 1.17., 1.32., 2.02., 2.15., 2.25., 2.45., 2.55., 3.05., 3.23 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் 13 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 10.38., 10.56., 11.10., 11.30., 11.45., மதியம் 12.10., 12.43., 1.22., 1.35., 2.01., 2.23 மணிக்கு சென்னை கடற்கரை-தாம்பரம் வரை செல்லும் 11 மின்சார ரயில்களும் பல்லாவரம் வரை மட்டுமே செல்லும். சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40 மணி மற்றும் மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு காஞ்சிபுரம் வரை செல்லும் 2 மின்சார ரயில்களும், அதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.00 மணி மற்றும் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் 2 மின்சார ரயில்களும் கடந்த சில நாட்களாக தாம்பரம்-செங்கல்பட்டு வரை சில ரயில் நிலையங்களிலும் மட்டுமே நின்று சென்றன.
ஆனால் வரும் 14 ஆம் தேதி முதல் இந்த 4 மின்சார ரயில்களும் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.