ஹாங்காங் சென்றுவிட்டு சென்னை திரும்பிய தாம்பரம் பெண்ணுக்கு கொரோனா அறிகுறி.. தீவிர சிகிச்சை
Recommended Video
சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா என்ற வைரஸ் நோய் கடந்த டிசம்பம் மாதம் முதல் சீனாவில் பரவியது. இது வுகான் மாகாணத்தில் உள்ள மீன் சந்தையிலிருந்து பரவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாம்பை உண்ணும் சீனர்களுக்கு பரவிவிட்டதாக தெரிகிறது. இந்த நோய்க்கு இதுவரை சீனாவில் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

நோய் பாதிப்பு
இந்த நோய் இதுவரை 17 நாடுகளுக்கு பரவியுள்ளது. நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். மேலும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் அந்தந்த விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குரோம்பேட்டை
இந்த நிலையில் சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவரது கணவர் ஹாங்காங்கில் பணிபுரிந்து வருகிறார். அவரைப் பார்க்க கடந்த வாரம் சென்றுவிட்டு நேற்று நள்ளிரவில் சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணிற்கு காய்ச்சல், இருமல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.

தனி அறை
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பிரத்தியேக உடைகள் அணிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என தனி அறை அமைக்கப்பட்டு உள்ளது.

சிகிச்சை
அந்த பெண்ணையும் தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான சாதனங்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இல்லாததால் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் சீனாவில் சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்தார்.












Click it and Unblock the Notifications