திராவிட மொழிகளின் தாய் தமிழ்.. சிந்து சமவெளி, திராவிட நாகரீகம்தான்.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
Recommended Video

சென்னை: திராவிடத்தின் தாய்மொழியாக தமிழ் விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, புனித பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின அங்கமாக இயங்கவிருக்கும் "திராவிட இயல் ஆய்வு நிறுவனத்தினை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: இனமும், மொழியும் காக்கப்படுவதற்காக அண்ணா ஆற்றிய அரும்பணிகளைப் பற்றிய ஆய்வுகளை திராவிட இயல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். திராவிட மொழிகளின் தாயாக விளங்குவது தமிழ் மொழி.
திராவிட மற்ற மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழ் இலக்கியத்திற்கு 30 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட வளம் உள்ளது. எந்த மொழியின் துணை கொண்டும் இயங்காமல், தனிச் சொற்களைக் கொண்டு தனித்து இயங்கக்கூடிய ஒரு தனி மொழி தமிழ் என்பதை ஆய்வுகள் மெய்ப்பித்தன.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், இன்று (15.9.2018) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, புனித பீட்டர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின அங்கமாக இயங்கவிருக்கும் "திராவிட இயல் ஆய்வு நிறுவனத்தினை துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார். pic.twitter.com/rDHvOL7DLz
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 15, 2018
சிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகமாகும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நமது திராவிட மாநிலங்களிலுள்ள இயற்கை கொடைகளான மிகை நீரையும், மிகை மின்சாரத்தையும், உற்பத்தியாகின்ற உணவையும், ஒவ்வொரு திராவிட மாநிலங்களும், தங்களுக்குள் பகிர்ந்து உதவ வேண்டும்.
அறிஞர் அண்ணாவின் படைப்புகள் மற்றும் பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகளை மாணவர்களிடையே பரப்ப வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications