எஸ்.எஸ்.எல்.சி தேர்வு: அனைவருக்கும் முதல் பாடம் ”தமிழ்”தான் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணையில், "தமிழ்மொழி கற்றல் சட்டம் 2006 இல் குறிப்பிட்ட வழிமுறையின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி 1 இல் தமிழ் மொழியை தொடக்கப்பள்ளிகளில் 2006 ஆம் ஆண்டு முதல் 1 ஆவது வகுப்பில் அறிமுகப்படுத்தவேண்டும்.
அதன்படி படித்த அந்த மாணவர்கள் இப்போது எஸ்.எஸ்.எல்.சி தேர்வை எழுத உள்ளனர். இது குறித்து அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் பல தடவை சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

மற்ற மொழிப்பாடங்கள்:
மேலும் பகுதி 2 இல் ஆங்கில பாடத்தையும், பகுதி 3 இல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை சிறுபான்மை மொழியிலும் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ப்பாடத்தில் விலக்கு:
தற்போது 2015-2016 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் பகுதி 1 இல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு பெறக்கோரி மாணவர் ஒருவர் மனு கொடுத்துள்ளார். அந்த மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது.

பாடபுத்தக விநியோகம்:
அந்த மாணவர் படிக்கும் சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு பகுதி 1 இல் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பாடப்புத்தகம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி அறிக்கை வழங்கல்:
அந்த பள்ளியில் தமிழ்ப்பாடம் போதிக்க முறையான தமிழ்ப்பாட பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு தமிழ்ப்பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது. முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட மாணவருக்கு தேர்ச்சி அறிக்கை பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.

கட்டாயம் எழுத வேண்டும்:
எனவே 2015-1016 கல்விஆண்டில் 10 ஆவது வகுப்பு தேர்வில் பகுதி 1 இல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவது சார்ந்த கோரிக்கையினை ஏற்க இயலாது" என்று தெரிவித்துள்ளார்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications