ஜெ. மீண்டும் முதல்வரான பின் முதல் முறை கூடியது சட்டசபை- அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் உற்சாக வரவேற்பு!!
சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 25-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். அந்த கூட்டத் தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெற்றது.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் எதுவும் நடத்தாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. பொதுவாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்து கொள்ளப்படுவது வழக்கம். இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விரிவாக பதிலளித்து பேசுவார். சுமார் 1 மாதம் இந்த கூட்டம் நடைபெறும்.

ஆனால் கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர் சட்டசபை கூட்டம் கூட்டப்படவே இல்லை. இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலையான ஜெயலலிதா, மே 23-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
அப்போது உடனடியாக சட்டசபை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டப்படவில்லை. இதன் பின்னர் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். இதனைத் தொடர்ந்தும் சட்டசபை கூட்டப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் சட்டசபை கூட்டப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்தநிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது.

உற்சாக வரவேற்பு
சட்டசபைக்கு முதல்வர் ஜெயலலிதா வருகை தந்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று மேஜையை பலமாக தட்டி உற்சாக வரவேற்பளித்தனர். இதன் பின்னர் ஆர்.கே.நகர் தேர்தலில் வென்ற ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டினார்.
இரங்கல்
இதனைத் தொடர்ந்து மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் அமைச்சரான செந்தூர் பாண்டியன், இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார்.
ஒத்திவைப்பு
அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு சட்டசபை நடவடிக்கைகள் நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications