ஜெ.வை சந்தித்த டிஜிபி, கமிஷனர் ஜார்ஜ்- பதவியேற்பு விழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமார், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 8 மாதகாலமாக எந்த அரசு அதிகாரியையும் ஜெயலலிதா சந்திக்காமல் தவிர்த்து வந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், ஐ.பி.எஸ் அதிகரிகளும் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து போயஸ் தோட்டம் முன்னர் திரண்டுள்ள அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இந்நிலையில் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடி உள்ளனர். தீர்ப்பை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜெயலலிதா வரும் புதன்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று முதல்வராக பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையொட்டி டிஜிபி அசோக்குமார், சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் போயஸ்தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பதவி ஏற்பு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதியன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி வந்த நாள் முதல் அதிகாரிகள் யாரையும் சந்திக்காமல் இருந்தார். தற்போது வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் போயஸ் தோட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications