ரூ. 300 கட்டணத்தில் பெண்கள் விடுதி- தமிழக அரசின் புதிய திட்டம்
சென்னை: சொந்த ஊரை விட்டு வேலை, படிப்புக்காக சென்னை போன்ற நகரங்களுக்கு வரும் பெண்களுக்கு மிகப்பெரிய கவலையே தங்குமிடம்தான்.
விடுதிகள் கிடைப்பதற்குள் வேலையே வேண்டாம் என்ற எண்ணமே தோன்றிவிடும்.
இன்னும் தங்குமிடம் கிடைத்தாலும் அதன் வாடகை, மற்ற செலவுகள் என வீட்டிற்கே பணம் அனுப்பக்கூட தத்தளிக்கும் நிலைமை ஏற்படுகின்றது.

அரசாங்க பெண்கள் விடுதி:
இந்த கவலைகளைப் போக்கவும், பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் தற்போது அரசு விடுதிகளை சமீபத்தில் திறந்திருக்கின்றது அரசின் சமூக நலத்துறை.

300 ரூபாய் கட்டணம்:
ரூபாய் 300 கட்டணத்தில் 12 இடங்களில் இவ்விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

12 இடங்கள்:
சென்னையைப் பொருத்த வரையில் பெரம்பூர், வியாசர் பாடி, பள்ளிக்கரணை, சேலையூர், ஒக்கியம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளிலும், திருச்சி, கோவை, விழுப்புரத்திலும் இவ்விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

மற்ற இடங்களில் 200:
சென்னையில் 300 ரூபாய் கட்டணம், மற்ற பகுதிகளில் 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் போதும்:
ஒரு விடுதியில் 50 பெண்கள் சேர முடியும். இவ்விடுதியில் சேர ரேஷன் கார்டு ஜெராக்ஸுடன், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சமூக நலத்துறை அலுவலரிடம் ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பம் அளித்தால் போதுமானது.

வெளியூர் பெண்களுக்கே அனுமதி:
உணவு மற்றும் பராமரிப்பு கட்டணம் மட்டும் தங்கியிருக்கும் பெண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விடுதிகளில் வெளியூர் பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும். அதே ஊரைச் சேர்ந்த பெண்கள் தங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications