For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மீண்டும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் ஜி.பிரகாஷ், நகராட்சி நிர்வாகத்துறை மேலாண் இயக்குனராக சந்திரகாந்த் பி.காம்பிளேக்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளார்.

சந்திரகாந்த் பி.காம்பிளே தமிழ்நாடு சிமெண்டு கழக நிர்வாக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது "கோ-ஆப்டெக்ஸ்" நிறுவன நிர்வாக மேலாண் இயக்குனராக பணியாற்றும் டி.என்.வெங்கடேஷ் மறு உத்தரவு வரும் வரை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்து உள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவன நிர்வாக மேலாண் இயக்குனராக முன்பு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நியமிக்கப்பபட்டிருந்தார். அங்கும் அவர் நேர்மையாக செயல்பட்டதால், அவரை தூக்கி அதிகாரமே இல்லாத அறிவியல் நகர துணைத் தலைவராக நியமித்தனர். இந்த நிலையில்தான் கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்கும் பொறுப்பை அவரிடம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்தது. ஆனால் அதிலும் அவரை ஈடுபட விடாமல் தமிழக அரசு அலைக்கழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
2 IAS officers swap to the postings in Chennai. This order released by the Government yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X