சட்டம் ஒழுங்கை கெடுப்போரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை கோபப் பேச்சு!
Recommended Video

சென்னை: தூத்துக்குடி சம்பவத்தை முன்வைத்து தமிழகத்தின் பிற பகுதிகளில் மக்களுக்கு தொல்லை தருவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து 2 நாட்களாக அமைதி காத்து வந்தார் தமிழிசை. தற்போது காட்டமாக பேச ஆரம்பித்துள்ளார். கிட்டத்தட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவது போல உள்ளது அவரது பேச்சுக்கள்.
டிவிட்டரில் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்த தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. சென்னையில் தமிழிசை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

இரும்புக் கரம்
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேநேரம், இதை காரணமாக வைத்து சென்னை, கடலூர் என அங்கங்கு போராட்டம் நடத்தி சட்டம்ஒழுங்கை சீர்குலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைத்தால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.

வேறு மாதிரி அணுகியிருக்கலாம்
அரசு இந்த பிரச்சினையை வேறு மாதிரிதான் அணுகியிருக்க வேண்டும், அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

உயிரைப் பறிக்கும் அளவுக்கு போயிருக்கக் கூடாது
மாவட்ட ஆட்சியர் மக்களை பார்த்திருக்க வேண்டும், அதை செய்யவில்லை. போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால் அப்பாவிகள் உயிரை பறிக்கும் அளவுக்கு போராட்டம் போயிருக்க கூடாது.

முதல்வர் தூத்துக்குடி போயிருக்க வேண்டும்
முதல்வர் தனது அமைச்சரவை குழுவோடு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டோரை நேரில் போய்ப் பார்த்திருக்க வேண்டும். இது எனது வலிமையான கருத்து. எத்தனை எதிர்ப்பு வந்திருந்தாலும் முதல்வர் தனது அமைச்சர்களோடு தூத்துக்குடிக்கு போயிருக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications