மக்களுக்கு ஏமாற்றச் செய்தி.. தமிழகத்தில் மழை அளவு குறையுமாம்!
தமிழகத்தில் வரும் நாட்களில் மழையின் அளவு குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் வரும் நாட்களில் மழையின் அளவு குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்க கடல் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய வங்க கடலில் இருந்து வடமேற்கு திசையில் ஒடிசாவை நோக்கி நகர துவங்கி உள்ளது.
இதனால் அடுத்து வரும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யலாம் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.












Click it and Unblock the Notifications