சசிகலா பரோல் தாமதத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.. அமைச்சர் கடம்பூர் ராஜு
சசிகிலாவுக்கு பரோல் வழங்குவதில் தமிழக காவல்துறை இழுத்தடிக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகிலாவுக்கு பரோல் வழங்கும் விவகாத்தில் தமிழக காவல்துறை இழுத்தடிக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்க உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி பெங்களூரு சிறையில் சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார்.

பரோல் கோரி புதிய மனு
ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி சிறை நிர்வாகம் நேற்று முன்தினம் அவரது பரோல் கோரிக்கையை நிராகரித்தது. இதைத்தொடர்ந்து நேற்று கூடுதல் ஆவணங்களை சேர்த்து சசிகலா புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.

காவல்துறை இழுத்தடிக்கிறது
சசிகலா பரோல் பெற தமிழக காவல்துறை என்ஓசி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக தினகரன் தரப்பு குற்றம் சாட்டியது. இதன் காரணமாகவே சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியது.

குற்றச்சாட்டில் உண்மையில்லை
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு தினகரன் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சசிகலா பரோல் விவகாரத்தில் தமிழக காவல்துறை காலதாமதம் செய்வதாக கூறுவதில் உண்மையில்லை என்ற பரோலுக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

தேவையில்லாமல் பேசுகின்றனர்
மேலும் சசிகலா கர்நாடக சிறையில் இருப்பதால் அவருக்கு பரோல் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது கர்நாடக சிறைத்துறை தான் என்றும் கடம்பூர் ராஜு கூறினார். இதுதொடர்பாக தினகரன் தரப்பு தேவையில்லாமல் பேசுவதாகவும் அப்படிப்பட்ட சூழல் இல்லை என்றும் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications