ஏப்ரல் கடைசியில் தமிழக சட்டசபைத் தேர்தல்... மார்ச் 6ம் தேதி அறிவிப்பு?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலை ஏப்ரல் மாத இறுதிக்குள் அல்லது மே முதல் வாரத்தில் நடந்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அடுத்தமாதம் 6ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையில் பதவிக்காலம் வரும் மே 22ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக புதிய சட்டசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தேர்தல் ஆணையத்தின் பணி ஆகும்.
எனவே, தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையமும், கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

2 நாள் கூட்டம்...
இந்நிலையில், தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை...
இதில், 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக மார்ச் முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக...
இந்தக் கூட்டத்தில் 5 மாநிலங்களில் எந்தத் தேதிகளில், எத்தனை கட்டமாக தேர்தல் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம், அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்ததாகத் தெரிகிறது.

தேர்தல் தேதி...
இதன்படி, முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில் நடைபெறலாம் என்றும், தமிழகத்துக்கு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல்வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தமாதம் 6ம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications