தமிழ் புத்தாண்டும் விஷு கொண்டாட்டமும் : ஆலயங்களில் அலைமோதிய கூட்டம்
தமிழ் புத்தாண்டு தினம், விஷூ பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அலைமோதியது. சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சென்னை: தமிழ்ப்புத்தாண்டு தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னையில் மக்கள் அதிகாலை முதலே கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.
கேரளாவில் விஷூ என்றும், ஒடிசாவில் மகா விஷுபா சங்கராந்தி என்றும் பண்டிகை நாளாக இன்று கொண்டாடுகின்றனர். மலையாள மொழி பேசும் மக்கள் விஷூ பிறப்பை உற்சாகமாகக் கொண்டாடினர். சென்னையில் உள்ள மலையாள மக்கள் ஐயப்பன் ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர்.

தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு திருநாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து வகையான பழங்கள் காய், கனிகள் உள்ளிட்ட பொருட்களை சுவாமிக்கு வைத்தும் அதில் நகைகள், புடவைகள், பணம் மற்றும் கொன்றைப் பூவை வைத்து வழிபடுவர்.
கனி காணுதல்
புத்தாண்டு பிறக்கும் போது வயதில் பெரியவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஓவ்வொருவராக கண்ணை மூடிக் கொண்டு அழைத்து வந்து புத்தாண்டு தினத்தன்று பழம், கனிகள், பணம் உள்ளிட்டவற்றை பார்க்க வைப்பார்கள். இதன் மூலம் வருடம் முழுவதும் இது போன்ற நல்ல பொருட்களையே பார்க்க வேண்டும் என்ற ஐதீகம்.
கோவில்களில் வழிபாடு
அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று ஏராளமானோர் வழிபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றனர்.
வடபழனி முருகன் கோவில்
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.
பக்தர்கள் கூட்டம்
மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஐயப்பன் கோவில்
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் வழிபாடு நடத்தினர். ஐயப்பன் கோவில், பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதே போல எம்ஆர்சி நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மலையாள மொழி பேசும் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வாழ்த்து கூறி உற்சாகம்
பாரம்பரிய உடை அணிந்து வந்த மலையாள மொழி மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். அங்கு வந்த பக்தர்களுக்கு ஒவ்வொருவருக்கும் சொர்ண அபிசேஷகம் செய்யப்பட்டு இருந்த ஒரு ரூபாய் சில்லறை காசுகள் கைநீட்டம் எனப்படும் சடங்கின்படி அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications