மூடுங்கள் டாஸ்மாக் கடைகளை.. கரூரில் தமிழ் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்: டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி கரூரில் தமிழ் உணர்வாளர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள மதுபானக்கடை, அருகே கோயில் இருப்பதாகவும், மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், கடையை மூட சொல்லி பலமுறை மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் காந்தியவாதி சசிபெருமாள் இறப்பிற்கு நியாயம் கேட்டு மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் பந்த் நடத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியில், கரூரில் உள்ள சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடை முன்பு தமிழ் உணர்வாளர்கள், திருக்குறள் பேரவை, கரூர் தமிழிசைச் சங்கம், அரிமா சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள், கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை. பழநியப்பன் தலைமையில் மகாத்மா காந்தியடிகளின் வழி அமைதி போராட்டத்தை நடத்தினர்.
கடை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் கடையை மூடக் கோரி கோஷமிட்டனர். அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications