தமிழ் நவீன கவிதைகளின் முன்னோடி கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்
சென்னை: தமிழ் நவீன கவிதைகளின் முன்னோடி கவிஞர் ஞானக்கூத்தன் (வயது 78) சென்னையில் நேற்று இரவு காலமானார்.
1938ல் மயிலாடுதுறை அருகே பிறந்த ஞானக்கூத்தனின் இயற்பெயர் ரங்கநாதன். 1968ல் கவிதைகளை எழுத தொடங்கினார் ஞானக்கூத்தன்.
இன்றைய நவீன கவிதைகளின் முன்னோடிகளில் மிக முக்கியமானவர். ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் ஞானக்கூத்தன் இடம்பெற்றிருந்தார்.

படைப்புகள்
அன்று வேறு கிழமை, சூரியனுக்குப் பின்பக்கம், கடற்கரையில் சில மரங்கள், ஞானக்கூத்தன் கவிதைகள் ஆகியவை அவரது படைப்புகள்.

காலமானார்
சென்னையில் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு மனைவி, 2 மகன்கள் இருக்கின்றனர்.

மனுஷ்யபுத்திரன் இரங்கல்
ஞானக்கூத்தன் மறைவு தமிழ் இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்தார் என்ற தகவல் சற்று முன் கிடைத்தது. மனம் அடையும் தடுமாற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு ஆசானின் மறைவை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல.. என இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிக்கேது மரணம்?
கவிஞர் சல்மா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களது மரணம் தரும் அதிர்ச்சியும் சோகமும் இன்றைய அதிகாலையை வெறுமையானதாக மாற்றியிருக்கிறது(:-கவிக்கு ஏது மரணம்? என பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications