For Daily Alerts
Just In
உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் தமிழருவி மணியன்! சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்!!
திருப்பூர்: நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் இரண்டு இடங்களில் தனித்து களமிறங்குகிறது.
கோவை மேயர் பதவிக்கும், திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியின் பேரூராட்சித் தலைவர் பதவிக்கும் போட்டியிட காந்திய மக்கள் இயக்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அல்லாத பாஜக தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை காந்திய மக்கள் இயக்கத்தலைவர் திரு. தமிழருவி மணியன் உருவாக்கினார். அந்த கூட்டணிக் கட்சியினர் அனைவரும் தற்போது பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் இரண்டு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Comments
local body election tirupur உள்ளாட்சி இடைத்தேர்தல் காந்திய மக்கள் இயக்கம் தமிழருவி மணியன் திருப்பூர்
English summary
Tamilaruvi Manian led Gandhiya Makkal Iyakkam has decided to contest in local body elections in Tamil Nadu.