For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் மார்ச் 30-க்குள் அமைக்கப்படும்- தமிழிசை

காவிரி மேலாண்மை வாரியம் 30-ஆம் தேதிக்குள் அமைக்கப்படும் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் 30-ஆம் தேதிக்குள் அமைக்கப்படும் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தற்போது பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. கோடை வெயிலுக்கு முன்பே அந்த வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது.

Tamilisai says that Centre will implement SCs verdict

ஆனால் மத்திய அரசோ பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என சொல்லும் காங்கிரஸ் பின்னோக்கி செல்கிறது.

எதைக் கொண்டு வைத்தாலும் தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட்தான் வாங்கும். தேர்தலில் மக்கள் எடுக்கும் முடிவை இயந்திரத்தின் மீது போட்டு காங்கிரஸ் கட்சி கொச்சைப்படுத்த வேண்டாம்.

திராவிட நாடு குறித்த கருத்தில் ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார். அதிமுகவை பாஜக இயக்குவதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வரும் 30-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்றார் அவர்.

English summary
Tamilisai Soundararajan says that Centre will implement SC's verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X