10 வருடம் மத்திய அரசில் இருந்தபோது ஏன் செய்யவில்லை? கருணாநிதிக்கு தமிழிசை கேள்வி
சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் திமுக பங்கு பெற்றிருந்த போது ஏன் காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வலியுறுத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக தலைவர் கருணாநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தக்காளி விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். விரைவில் விலை குறைந்துவிடும்.

நாட்டில் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதே பா.ஜ. அரசின் நோக்கம். காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தற்போது பேசும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, நானும் பல கேள்விகளை எழுப்ப முடியும்
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்த போது திமுக ஏன் இப்பிரச்சனை குறித்து வலியுறுத்தவில்லை. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா, இரு தினங்கள் முன்பு, பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதுகுறித்து கருத்து கூறிய கருணாநிதி, தொடர் அரசியல் அழுத்தங்கள் இருந்தால்தான் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications