ஆண்டாளை பழித்த கவிஞரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார் - தமிழிசை
Recommended Video

சென்னை: ஆண்டாளை பழித்த கவிஞர் வைரமுத்துவின் முகத்திரையை சின்மயி மூலம் ஆண்டாளே கிழிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்யபிரமாணம் ஏற்கும் கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழிசை பேசுகையில் 100 ஆண்டுகளாக தொன்று தொட்டு வரும் பழக்கம் மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 படி மத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் அது இந்து மதத்திற்கும் பொருந்தும். எதிர்க்கட்சியினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிப்பது இல்லை. அவ்வளவு தீண்டத்தகாத மதமாகிவிட்டதா இந்து மதம்?
ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவத்தில் ஆண்டாள் முகத்திரையை கிழித்துக் கொண்டிருக்கிறாள். ஆண்டாள் சின்மயி வடிவத்தில் வந்து முகத்திரையை கிழிக்கிறார் என்றார்.
[விண்ணை தாண்டி செல்லும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் அவதி]
கூட்டத்தின் இறுதியில் மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஐயப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு குழுமியிருந்த அனைவரும் கோவில் மரபுகளை கடைபிடிப்பதாகவும் பெண்கள் கோவிலுக்கு செல்லமாட்டோம் என்று சத்யபிரமாணம் ஏற்றனர்.












Click it and Unblock the Notifications