கமல் ஏன் எனக்கு மெயில் அனுப்புகிறார்?... தமிழிசை டென்ஷன்
மக்கள் நீதி மய்யத்தில் சேர எனக்கு ஈமெயில் மூலம் விண்ணப்ப படிவத்தை அனுப்பியுள்ளனர்.
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் சேர வேண்டும் என ஈமெயில் வந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கொந்தளித்தார்.
கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கடுமை
கல்லூரி மாணவர்கள் கமல் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொள்கின்றன. கமல் அரசியல் குறித்து பேச ஆரம்பித்த போதெல்லாம் அதை கடுமையாக விமர்சித்தவர் தமிழிசை.

தமிழிசைக்கு அழைப்பு
இன்று மக்கள் நீதி மய்யத்தில் சேருமாறு அவருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர்
இதுகுறித்து தமிழிசை கூறுகையில் , மக்கள் நீதி மய்யத்தில் சேர எனக்கும் இ- மெயிலில் அழைப்பு வந்தது. பாஜக மாநில தலைவரான நான் எப்படி கமல் கட்சியில் உறுப்பினராவேன்.

தெள்ளத் தெளிவாக தெரிகிறது
உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுகிறது. இது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்றார் தமிழிசை. அந்த மெயிலில் தமிழிசை உறுப்பினராக இணைந்தமைக்கு உளமார்ந்த நன்றி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீங்களும் நானும் நாம் ஆனோம் என்றும் நாளை நமதே என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications