சின்மயியின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்.. தமிழிசை கோரிக்கை
பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் தற்போது இது வைரலாகி உள்ளது.

பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். சில பிரபலங்கள் குறித்து வரும் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து குறித்தும், சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இந்த குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது. இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சின்மயிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்??singer @Chinmayi accusations merit further investigations Cineworld silent??? https://t.co/pCSicsUMBh
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) October 10, 2018
அதில், பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?? என்று சின்மயியை டேக் செய்து போஸ்ட் போட்டுள்ளார்.
[நெல்லை, தூத்துக்குடி.. கோலாகலமாக தொடங்கியது தாமிரபரணி மஹா புஷ்கர விழா]
தமிழிசையின் போஸ்ட் மீண்டும் விவாதத்தை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications