ஐசியூவில் இருந்த பொருளாதாரம் நார்மல் வார்டுக்கு மாறி இருக்கிறது... சொல்றது தமிழிசை!
பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருந்த நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருந்த நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல, இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம், விரைவில் அதை நடக்க வைப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்றாற் போல இது ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பட்ஜெட்டுக்கு புதிய விளக்கத்தை தந்துள்ளார். தமிழக ஆட்சி ஐசியூவில் இருப்பதாக கிண்டல் செய்தனர் எதிர்கட்சியினர்.

ஐசியூ டூ நார்மல் வார்டு
பட்ஜெட்டிற்கு இந்த கருத்தை முடிச்சு போட்டு கருத்து சொல்லியுள்ளார் தமிழிசை. பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல. பொருளாதாரத்தை நார்மல் வார்டுக்கு மாற்றி இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம், விரைவில் அதை நடக்க வைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
|
நாடி நரம்புல ஊறிப்போன டாக்டர்
தமிழிசையின் இந்த கருத்துக்கு பலரும் டுவிட்டரில் பதில் கருத்துகளை தெறிக்கவிடுகின்றனர். இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம் விரைவில் அதை நடக்க வைப்போம் என்கிறார் தமிழிசை. நாடி நரம்பு சதை இரத்தம் முழுவதும் மருந்துவம் ஊறிப் போன ஒரு டாக்டர்ரால தான் இப்படி பேசமுடியும் என்று கருத்து பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
இது எந்த மொமண்ட்?
தமிழிசையின் கருத்தை செந்தில் கவுண்டமணி காமெடியோடு ஒப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ளார் இவர். இதுல எப்படின்னே லைட் எரியும் மொமண்ட் தமிழிசையின் கருத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
மக்கள் நோயாளியா?
இந்த பட்ஜெட் ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல உள்ளது என்று தமிழிசை கூறியுள்ளார். மக்களை நோயாளிங்கனு சொல்லாம சொல்லுறாங்க போல என்று கூறியுள்ளார் இந்த வலைபதிவர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications