ஐசியூவில் இருந்த பொருளாதாரம் நார்மல் வார்டுக்கு மாறி இருக்கிறது... சொல்றது தமிழிசை!
பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருந்த நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருந்த நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல, இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம், விரைவில் அதை நடக்க வைப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்றாற் போல இது ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பட்ஜெட்டுக்கு புதிய விளக்கத்தை தந்துள்ளார். தமிழக ஆட்சி ஐசியூவில் இருப்பதாக கிண்டல் செய்தனர் எதிர்கட்சியினர்.

ஐசியூ டூ நார்மல் வார்டு
பட்ஜெட்டிற்கு இந்த கருத்தை முடிச்சு போட்டு கருத்து சொல்லியுள்ளார் தமிழிசை. பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல. பொருளாதாரத்தை நார்மல் வார்டுக்கு மாற்றி இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம், விரைவில் அதை நடக்க வைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
|
நாடி நரம்புல ஊறிப்போன டாக்டர்
தமிழிசையின் இந்த கருத்துக்கு பலரும் டுவிட்டரில் பதில் கருத்துகளை தெறிக்கவிடுகின்றனர். இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம் விரைவில் அதை நடக்க வைப்போம் என்கிறார் தமிழிசை. நாடி நரம்பு சதை இரத்தம் முழுவதும் மருந்துவம் ஊறிப் போன ஒரு டாக்டர்ரால தான் இப்படி பேசமுடியும் என்று கருத்து பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
இது எந்த மொமண்ட்?
தமிழிசையின் கருத்தை செந்தில் கவுண்டமணி காமெடியோடு ஒப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ளார் இவர். இதுல எப்படின்னே லைட் எரியும் மொமண்ட் தமிழிசையின் கருத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
மக்கள் நோயாளியா?
இந்த பட்ஜெட் ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல உள்ளது என்று தமிழிசை கூறியுள்ளார். மக்களை நோயாளிங்கனு சொல்லாம சொல்லுறாங்க போல என்று கூறியுள்ளார் இந்த வலைபதிவர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications