விஷாலும் சுயேச்சை வேட்பாளர்தான்.. தமிழிசை செம கலாய்!
விஷாலும் சுயேச்சை வேட்பாளர்தான் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: நடிகர் விஷாலும் மற்றவர்களை போல் சுயேச்சை வேட்பாளர்தான் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக, தீபா பேரவை, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
நடிகர் விஷாலும் இதில் போட்டியிடுகிறார். ஆனால் தான் அரசியல்வாதி இல்லை என்றும் மக்கள் பிரதிநிதியாக போட்டியிட வந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழிசை செய்தியாளர்களுடன் சந்திப்பு
இந்நிலையில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்தார். அப்போது அங்கு வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்தார்.
தனித்தன்மையுடன்
அவர் கூறுகையில், பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும். வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பதற்கான சூழலை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி தர வேண்டும். பாஜக தனித்து போட்டியிடவில்லை, தனித்தன்மையுடன் போட்டியிடுகிறது. நாங்கள் ஆர்.கே.நகர் போன்று எத்தனையோ இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை சந்தித்துவிட்டோம். இது ஒன்றும் புதிதல்ல.
விஷால் சுயேச்சை வேட்பாளர்
வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்குவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றார். விஷால் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது தமிழிசை கூறுகையில், எத்தனை சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். அதுபோல் விஷாலும் ஒரு சுயேச்சை வேட்பாளர்தான்.
அதிகம் பேர் உள்ளனர்
எனவே சுயேச்சை வேட்பாளர்கள் குறித்து கருத்து சொல்ல முடியாது. சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். இன்னும் வேட்புமனு தாக்கல் செய்ய குறுகிய நேரம் உள்ளதால் இதை நிர்வாக ரீதியாக எப்படி சமாளிப்பர் என்று தெரியவில்லை என்றார்.