டெல்லியில் உள்நோக்கத்துடன் விவசாயிகள் போராட்டமாம்... இழிவுபடுத்தும் தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக விவசாயிகள் போராட்டம் உள்நோக்கம் கொண்டது என்றும் விவசாயக்கடன் மாநில அரசின் பிரச்சினை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுவது மாநில அரசின் பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளின் அரை நிர்வாணமாக 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. டெல்லியில் இன்று போராடும் விவசாயிகள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசுகிறார்கள். விவசாயிகள் மாலை 4 மணிக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்திக்கிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறைக்கிறது. விவசாயக் கடன் ரத்து என்பது மாநில அரசின் பிரச்னை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அய்யாக்கண்ணு அவர்கள் எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள் என்று கேட்க வேண்டும். இது மத்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட போராட்டம் என்றும் கூறியுள்ளார். நிவாரண நிதி கேட்டுள்ளது அந்தந்த துறைகளுக்கு தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications