ஆர்.கே. நகரில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்புகள் அதிகம்... இதுதான் காரணம்!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருந்தது. அதனால் வருகிற ஏப்ரல் மாதம 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆர். கே. நகரை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த நிலை தற்போது மாறியுள்ளது.

Tamilisai Soundrarajan to contest in RK Nagar By Election?

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி என்று மூன்றாக பிரிந்துள்ளது. இது திமுகவுக்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆர்.கே. நகர் தொகுதியில் நாடார் சமூகத்தினர் கணிசமான அளவுக்கு வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் திருவொற்றியூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். தொகுதி மறுசீரமைப்பில் அந்த பகுதி ஆர்.கே. நகர் தொகுதியோடு இணைக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் தமிழிசை சவுந்தரராஜன் ராயபுரத்தில் உள்ள புனித லூர்து அன்னை மேல்நிலை பள்ளியில் படித்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் ராயபுரம் பகுதியில்தான் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+