For Quick Alerts
For Daily Alerts
Just In
தீர்ப்பு எதுவானாலும் அமைதி காக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, "ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தமிழக போலீசாரும் அதிகாரிகளும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் அமைதி காக்க வேண்டும். அதிமுக.,வினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வந்த போது ஏற்பட்டதை போல் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தமிழக போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
English summary
BJP Tamil Nadu leader Tamilisai soundarrajan says that whatever the verdict, party cadres will be silent.
Story first published: Monday, May 11, 2015, 11:58 [IST]