For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே 9-ல் பிளஸ் 2 ரிசல்ட்… மே 23-ல் எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட் வெளியீடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியிலும் வெளியிடப்படும் என தமிழக அரசின் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய தேர்வாக பிளஸ் 2 பொதுத்தேர்வு கருதப்படுகிறது.

Tamilnadu 12th std Results May 9th 2014….. SSLC result on May 23

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட 8.45 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம்வகுப்பு தேர்வுகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கியது ஏப்ரல் 9-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வர்களைச் சேர்த்து ஏறத்தாழ 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். இத்தேர்வின் முடிவு மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது.

English summary
According to an official press release, from the directrate of The Directorate of Government Examinations , Chennai, the result for Tamilnadu State board Plus two,will declare on May 9th. Class 10th result will declare on May 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X