For Daily Alerts
Just In
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக சிங்காரவேலர் சிலைக்கு முதல்வர் மரியாதை
சென்னை
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமான சிங்காரவேலரின் பிறந்த நாளையொட்டி சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், காலையிலேயே சிங்காரவேலருக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Tamilnadu CM Edappadi Palanichami pays tribute to Singaravelar at Chennai.
Story first published: Saturday, February 18, 2017, 8:52 [IST]