ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை.. ஸ்டாலின் கண்டனம்
சென்னையில் நடக்கும் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களின் போராட்டம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னையில் நடக்கும் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களின் போராட்டம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். சென்னை சேப்பாக்கம், வாலஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கோட்டை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். மோசமாக போலீசால் தாக்கப்பட்டு இவர்களை கைது செய்து அருகருகே உள்ள மண்டபங்களில் அடைத்து வைத்தார்கள். இதில் மோசமாக தாக்கப்பட்ட தியாகராஜன் என்று ஆசிரியர் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களுடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தி இருக்கிறார். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அவர்களிடம் அவர் உறுதி அளித்தார். இந்த சந்திப்பிற்கு பின் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அதில் ''தமிழகத்தில் அரசு இருப்பதாக நினைக்கவில்லை. ஊழியர்களின் போராட்டம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை.ஆணவத்தின் உச்சாணி கொம்பில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை.'' என்றுள்ளார்.
மேலும் ''போராட்டம் நடத்திய ஜாக்டோ- ஜியோவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது.போராட்டம் அறிவித்த உடனே அவர்களிடம் அரசு பேசி சுமூகத்தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.தமிழகத்தில் அரசாங்கம் ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை'' என்றார்.
நேற்றே போராட்டம் நடத்தாத வந்த அரசு ஊழியர்களை அரசு கைது செய்து இருந்தது. சுமார் 1500 அரசு ஊழியர்களை போலீஸ் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications