கோவையில் ஆளுநர் ஆய்வு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன் சாடல்
அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு செய்வது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் பன்வாரிலால் புரோஹித். இவர் இன்று கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் , காவல்துறை ஆணையர் அமல்ராஜ், வருவாய்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.

ஸ்மார்ட் சிட்டிகள் பட்டியலில் கோவை இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நடக்கும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறியவே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாவட்ட அதிகாரிகளை மட்டும் சந்தித்துள்ள ஆளுநர் நாளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி தலைவர்களோடும் ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கோவை மாவட்டத்தில் ஆளுநர் திடீர் ஆய்வு மேற்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை எந்த ஆளுநரும் மாவட்ட நிர்வாகத்தில் தலையிட்டது இல்லை என்றார்.
ஆனால் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு உரிமை இல்லை என்று எந்த சட்டமும் இல்லை, ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications