7 பேரையும் விடுதலை செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.. அமைச்சர் ஜெயக்குமார்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tamilnadu govt is confident to release Sevan tamils: Minister Jayakumar

மேலும் இதுதொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரைக்கலாம் என்றும் சுப்ரிம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் 7 பேரையும் தமிழக அரசு விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 15வது நிதிக்குழு கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+