மழை வருமாம்.. தமிழகம் முழுக்க வருண பூஜை நடத்திய அமைச்சர்கள்.. குளங்களை தூர்வாரிய ஸ்டாலின்
சென்னை: பருவமழை ஏமாற்றியதால், தமிழகம் முழுவதும் ஏரி குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதையடுத்து அமைச்சர்கள் வருண பூஜை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து, ஏரி குளங்கள் நிரம்பவேண்டும் என்பதற்காக, இந்து சமய அறநிலைய துறை சார்பில், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில், வருண பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில், ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் தொகுதி எம்.பி. வேணுகோபால், பொன்னேரி எம்எல்ஏ சிறுனியம் மலராமன், பூவிருந்தவல்லி எம்எல்ஏ ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டனர். அங்க வஸ்திரம், மாலைகள் அணிந்துகொண்டு கோவில் குளத்துக்கு சென்று மலர் தூவி யாகத்தை நிறைவு செய்தனர்.

காஞ்சியில் அர்ச்சனை
காஞ்சிபுரத்தில் மழை பெய்வதற்காக, காஞ்சி கச்சேஷ்பரர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் வருண யாகம் நடைபெற்றது. அப்போது, 20 அர்ச்சகர்கள் குளத்தில் அமர்ந்தபடி வேதமந்திரங்கள் ஓதி மழை வேண்டி வருணபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தனர். குடத்தில் இருந்த புனித நீரை குளத்தில் ஊற்றினர்.

திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில், மழைவேண்டி நடைபெற்ற வருண யாகத்தில், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சையில்
தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாத ஸ்வாமி ஆலயம், திருவலஞ்சுழி ஸ்ரீ கபர்தீஸ்வரர் ஆலயம், சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி ஆலயத்திலும் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, எம்பி ஆர்.கே.பாரதிமோகன், தஞ்சை எம்எல்ஏ ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் மழைவேண்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நாகை மயிலாடுதுறையில், எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதேநேரம், தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையை அதிமுக அரசு தடுத்தாலே நிலத்தடி நீரை காப்பாற்றிவிடலாம் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

குளம் தூர்வாரும் பணியியில் ஸ்டாலின்
ஒருபக்கம் மழைக்காக அமைச்சர்கள் யாகம் நடத்திய நிலையில், மழை பெய்த பிறகு தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைப்பதற்காக, திமுக சார்பில் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் குளங்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தென்னூர் வீரியபெருமாள் கோவில் குளத்தை தூர்வாரும் பணியை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் கரூர் மாவட்டத்தில், குளித்தலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நாகனூர் மற்றும் நாதிப்படடி கிராம குளங்கள் தூர்வாரும் பணியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications