முதல் நாளில் ரூ. 480 கோடி ‘செல்லாக்காசுகளை’ மாற்றிய மக்கள்... ரிசர்வ் வங்கி தகவல்
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளில், செல்லாத ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ரூ. 480 கோடி மதிப்பிலா
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றி, புதிதாக ரூ. 480 கோடி மதிப்பிலான பணத்தை மக்கள் பெற்றுச் சென்றுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என செவ்வாயன்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், மக்கள் தங்களிடமுள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நேற்று வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

இதனால் நேற்று காலை முதலே வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் தங்களிடமிருந்த செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகள் அல்லது ரூ. 100 மற்றும் ரூ. 50 நோட்டுகளாக சில்லறை பெற்றுச் சென்றனர்.
அந்தவகையில், நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்குப் பதிலாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளித்த புதிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.480 கோடி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுகையில், "தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அனைத்து வங்கிக் கிளைகள் மூலம் ரூ.480 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன" என்றனர்.
இதுமட்டுமின்றி, புதிய பணத்தை மாற்றுவது மட்டுமின்றி கைவசம் உள்ள பணத்தை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தவும் நேற்று அதிக ஆர்வம் காட்டினர். அப்படியாக நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய்களை வாடிக்கையாளர்கள் வங்கியில் டெபாசிட் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில், புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் அடங்கிய 270 பெட்டிகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் ரூ.20 கோடி வீதம் மொத்தம் ரூ.5,400 கோடி தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளுக்கு அனுப்பும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications