திமுக ஆட்சியில் தமிழகத்தை 5ஆக பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர்.. ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் தமிழகம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு 5 பேரால் ஆட்சி செய்யப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: திமுக ஆட்சியில் தமிழகம் 5 ஆகப் பிரிக்கப்பட்டு 5 பேரால் ஆட்சி செய்யப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெறப்பட்டது.
இந்த திட்டத்தில் 10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு இருந்தும், தமிழகத்திற்கு திட்டங்களை திமுக கொண்டு வரவில்லை.

5 ஆக பிரிக்கப்பட்டது
திமுக ஆட்சியில் தமிழகத்தை 5 ஆக பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர். திமுகவால் தமிழகம் 5 மண்டலங்களாக பிரித்தாளப்பட்டது.

தனிப்பட்ட நலனுக்கானது அல்ல
பசுமை வழிச்சாலை திட்டம் தனிப்பட்ட நலனுக்கானது அல்ல. பொதுமக்களுக்காகவே சாலை திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியது அரசின் கடமை.

இரட்டை ஆட்சிதான்
இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் 3வது நீதிபதி மாற்றப்பட்டதில் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தமிழகத்தில் தற்போது நடந்து வருவது இரட்டை ஆட்சிதான் என்றும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளை கொண்ட இரட்டை ஆட்சி நடக்கிறது.

மக்களின் பயன்பாடு
அரசியல் காரணங்களுக்காக 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்க கூடாது. மக்களின் பயன்பாட்டிற்காகவே 8 வழிச்சாலை அமைக்கபப்டுகிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு












Click it and Unblock the Notifications