50 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம்- வாசன் சூளுரை
சென்னை: மக்கள் நல கூட்டணி, தேமுதிக கூட்டணியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்துக்கொண்ட பிறகு நிருபர்களிடம் வாசன் பேசியதாவது:
மாணவர்கள், மகளிர், முதியவர் என அனைவரும், ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மதுவில்லாத தமிழகம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெளிப்படையான நிர்வாகம் தேவை என்று நினைக்கிறார்கள். இதனை, பூர்த்தி செய்ய கூடிய கூட்டணி தலைவர் நமது முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்தான்.

அவரோடு இணைந்து, வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சி மாற்றத்திற்கு 100 சதவீதம் வித்திட்டவர்கள், வைகோ, திருமாவளவன், தோழர்கள், ராமகிருஷ்ணன், முத்தரசன் அவர்களும்தான். 50 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் உருவாகியுள்ளது. இந்த கூட்டணி ஒப்பந்தம்தான் அதற்கான அடித்தளம்.
இந்த கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கூட்டணி. 100 சதவீதம் வெல்லப்போகும் கூட்டணி. ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக செயல்பட கூடிய கூட்டணி. வாக்காளர்களை சந்திப்போம், உண்மைகளை எடுத்து கூறுவோம், நல்லவர்களை அடையாளம் காட்டுவோம். ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications