ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கலா.. பிரதமரின் டிவிட்டில் "கருத்துக் காளை"களை அவிழ்த்து விட்ட மக்கள்!
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்து ஏராளமான பதில் ட்வீட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று 'இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்' என தமிழில் பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவுக்கு வந்த நூற்றுக்கணக்கான பதில்க ட்வீட்டுகளில் சில:
|
முதல்ல ஜல்லிக்கட்டு
மோடி வாழ்த்து தெரிவித்த உடனேயே பதில் கொடுத்த இவர், "முதலில் ஜல்லிக்கட்டு- பின்னர் வாழ்த்துங்கள்" என ட்விட்டர் களத்தை சூடேற்றி வைத்தவர்.
|
எங்களை ஏங்க பிரிச்சீங்க
தெலுங்கானா, ஆந்திராவிலும்தான் பொங்கலை கொண்டாடுறோம்.. எங்க மாநிலங்களை மட்டும் இந்தியாவில் இருந்து பிரிக்காதீங்க என பொங்கியிருக்கிறார் இவர்...
|
காலம் பொன்னானது ஜி
ஜல்லிக்கட்டு இருந்தாதான் உண்மையான திருவிழா... காலம் பொன்போன்றது.. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியுங்க ஜி என கோரிக்கை வைக்கிறார் இந்த பதிவர்
|
தியாகம் செய்ய வைச்சுட்டீங்களே
தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை விட்டுக் கொடுக்கும்படியாகிவிட்டதே என வேதனைப்பட்டு பதிலளித்துள்ளார் பெருமாள் சுப்பையா.
|
பீட்டாவை பேன் பண்ணுங்க
உங்க வாழ்த்துக்கு நன்றி.. ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் மகிழ்ச்சியானது இல்லை... முதலில் மேற்கத்திய நாடுகளின் அமைப்பான பீட்டாவை தடை செய்யுங்க என கொந்தளித்துள்ளார் இப்பதிவர்.
|
சும்மா வாழ்த்தினா எப்பூடி?
வார்த்தைகளால் சொன்னா போதாது.. ஜல்லிக்கட்டு நடத்த சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை என கோபமாக பொங்கியிருக்கிறார் ஆனந்தராஜ்
|
பாரம்பரியத்தை புறக்கணிக்காதீங்க
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியுங்க... அப்பதான் மகிழ்ச்சியான பொங்கல்.. எங்கள் பாரம்பரியத்தை புறக்கணக்காதீங்க என்கிறார் சரவணகுரு.
|
வருத்தம்தாங்க..
வாழ்த்து தெரிவித்த மோடிக்கு தமிழிலேயே இப்படி பதிவிட்டிருக்கிறார் ஜெயக்குமார்.
|
இன்னொரு தமிழ் குமுறல்
மஞ்சு விரட்டு இல்லாமல் மகிழ்ச்சி இல்லை என்கிறார் குமார்.
|
இப்படி ஒரு ஆவேசம்
இந்த ஆவேசத்தை பாருங்க
|
விவசாயி வேண்டுகோள்
விவசாயி என்பவரின் அன்பு வேண்டுகோள்
இப்படி நூற்றுக்கணக்கான பதில் ட்வீட்டுகள் குவிந்து கொண்டே இருக்கிறது மோடியின் ட்விட்டர் பக்கத்தில்..












Click it and Unblock the Notifications