வெள்ளத்தால் வந்த புது சிக்கல்.. நெல்லைக்கு விநியோகமாகும் கலங்கலான குடிநீர்.. மக்கள் பீதி
நெல்லை: நெல்லையி்ல் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் தண்ணீரில் மூழ்கியதால் குடிநீர் கலங்கலாக வருகிறது. இதைப் பருக பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்று நோய் அபாயமும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலையில் உற்பத்தியாகிறது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, பாளையஙகோட்டை, ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆத்தூர் வழியாக புன்னைகாயல் சென்று ஆற்றில் கலக்கிறது.

தாமிரபரணி ஆறுதான் நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறது. வடகிழக்கு பருமழை காலங்களில் இந்த மூன்று மாவட்டங்களிலும் அதிக மழை கிடைக்கும். இதனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏறபட வாய்ப்பு உண்டு.
இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் அணைகள் நிரம்பி விட்டன. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது. இதில் ஆற்றில் அமைக்கப்பட்ட உறை கிணறுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதனால் மூன்று மாவட்டங்களுக்கும் கடந்த நான்கு நாட்களாக குடிநீ்ர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் பாதித்த ஓரு சில இடங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த தண்ணீர் செந்நிறமாக இருந்ததால் அதை குடிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதை பருகினால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். கடநத சில நாட்களாக பலர் விலை கொடுத்து குடிநீர் கேன்களை வாங்கி பயன்படுத்தி தொடங்கியுள்ளனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications