மாநகராட்சி தேர்தலை முதல் முறையாக எதிர்கொள்ளப் போகும் தஞ்சை, திண்டுக்கல்...
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சிகளும் முதன் முறையாக மாநகராட்சித் தேர்தலை எதிர்க் கொள்ளவிருக்கின்றன. இதனால் இந்த 2 மாநகராட்சிகளும் இம்முறை கூடுதல் கவனத்தைப் பெறுகின்றன.
தமிழகத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டமும் திண்டுக்கல் மாவட்டமும் மாநகராட்சியாக மாற்றப்பட்டப் பின்னர் முதன் முறையாக எதிர் கொள்ளப் போகும் தேர்தல் இது.
ஏற்கனவே, சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மாநகராட்சிகளாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு நகராட்சிகளாக இருந்து தஞ்சாவூரும், திண்டுக்கல்லும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதன் பிறகு, இந்த இரண்டு மாநகராட்சிகளும் முதல் முறையாக அடுத்த மாதம் வர போகும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்க் கொள்ள உள்ளது.
பொது பிரிவில் உள்ள தஞ்சாவூர் மாநகராட்சி, மேயர் பதவியில் தற்போது உள்ள சாவித்திரி கோபாலுக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பொதுப்பிரிவில் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி, தற்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மேயராக உள்ள மருதுராஜுக்கு அதிமுக தலைமை போட்டியிட வாய்ப்பளிக்க வில்லை.
முதல் முறையாக மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ள இந்த இரண்டு மாநகராட்சிகளையும் எந்தக் கட்சி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த மாவட்ட மக்களுக்கு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications