ஏற்கனவே 'சரக்கு' சரியில்லை என புலம்புகிறார்கள்.. இதில் தண்ணீர் கலந்து விற்ற டாஸ்மாக் ஊுழியர் -கைது

ஈரோடு, அகில்மேடு வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (38). இவர், தான், பணியாற்றி வரும் கடையில் உள்ள மதுபானங்களை விற்பனை செய்யும் போது, விலை உயர்ந்த மதுபானங்களின் மூடியை உடைத்து தண்ணீர் கலந்து மோசடியாக விற்பனை செய்து வந்ததாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. மேலும், இது குறித்து காவல்துறையிலும் புகார் செய்யப்பட்டது.
இதனையடுத்து, காங்கேயம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீஸார் அந்த மதுக்கடைக்கு திடீர் விசிட் அடித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது, விலை உயர்ந்த மதுபானங்களின் மூடியை உடைத்து தண்ணீர் கலந்து மோசடியாக விற்பனை செய்தது உண்மை என தெரிய வந்தது.
இதனையடுத்து, டாஸ்மாக் விற்பனையாளர் தாங்கராஜை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்யதனர்.
ஏற்கெனவே லக்காபுரத்தில்..!
இவர், ஏற்கெனவே லக்காபுரத்தில் பணியாற்றிய போது கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications